Friday, January 29, 2021

113 காதற் சிறப்புரைத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

113 காதற் சிறப்புரைத்தல்

( காதலைச் சொல்லி மகிழ்தல்)


குறள் 1121:

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலேயி றூறிய நீர்.


அவளது பற்களில் ஊறிவரும் நீரோ 

சுவைப்பாலும்  தேனுமென்றும் செப்பு.

குறள் 1122:

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு.


எங்கள் உறவோ உயிரும் உடம்பும்போல்

ஒன்றி இருக்கும் நிலை.

குறள் 1123:

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற் கில்லை யிடம்.


கண்மணிப் பாவையே போய்விடு! என்னவள்

தங்க இடம்வேண்டும் செல்.

குறள் 1124:

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து.


மாதரசி கூடினால் இன்னுயிர் சேர்ந்ததுபோல்! 

நீங்கினால் சாதலைப் போல்.

குறள் 1125:

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.


என்னவள் பண்பை  மறப்பதில்லை!

என்றுமறந்தேன்?

அன்பகத்தை நான்நினைக்க? செப்பு.

குறள் 1126:

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்

நுண்ணியர்எம் காத லவர்.

என்னவர் கண்விட்டு நீங்கமாட்டார்! கண்ணிமைத்தால்

புண்படார்! நுட்பமான அன்பு.

குறள் 1127:

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து.


கண்ணுள்ளே  அன்பருள்ளார்! மையிட்டால் போய்விடுவார்!

கண்மை போடமாட்டேன் நான்.

குறள் 1128:

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து.


நெஞ்சில் இருக்கின்ற காதலரைச் சுட்டுவிடும்

என்றேதான் சூடாக உண்ண மறுக்கின்றேன்!

என்னவரைப் புண்படுத்தல் தீது.

குறள் 1129:

இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னுமிவ் வூர்.


இமைத்தால் மறைந்திடுவார்! இமைக்க மறுத்தேன்!

இதற்கவரை நோகிறதே ஊர்!

குறள் 1130:

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னுமிவ் வூர்.


இதயத்தில் வாழ்கின்றார்! ஊரார் அவரைப்

பிரிந்துவிட்டார்  என்கிறாரே ஏன்?






























0 Comments:

Post a Comment

<< Home