Tuesday, October 12, 2021

பாசிமணியும் நூலும்!

 பாசிமணியும் நூலும்!


பாசி மணிக்குள்ளே நூலிருக்கும் காட்சிபோல

மேனி பளபளக்க நிம்மதி உள்ளிருக்கும்!

நூலறுந்து போவதைப்போல் உள்ளம் உளைச்சலில்

வாடினால் மேனியும் சோர்விலே தள்ளாடும்!

நூலிங்கே நைந்துபோகும் நிலையும் கவலைகள்

மேனிக்குள் உள்ளத்தை மொய்ப்பதும்

ஒன்றுதான்!

பாசிமணி தக்கவைக்கும் நூல்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home