Sunday, November 28, 2021

ஓரருவி யானதே ஐந்தருவி!


ஓரருவி யானதே ஐந்தருவி!

கட்டுக் கடங்காத வெள்ளம் பெருக்கெடுத்துச்

சுற்றிவந்த காரணத்தால் ஐந்தருவி மாறித்தான்

ஒட்டி உருவினிலே ஓரருவி யானதே!

கட்டுக்குள் வாழ்தல் அழகு.


ஐந்தருவி கட்டுக்குள் ஓடிவந்தால் என்றுமே

ஐந்தருவிக் காட்சி அழகாக பார்க்கலாம்!

ஐம்புலனைப் பேராசை வெள்ளமோ ஆட்கொள்ளும்

அந்தநிலை போலத்தான் வெள்ளம் பெருக்கெடுத்தால்

தன்னியல்பு மாறிவிடும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home