Monday, July 18, 2022

புதிர்


புதிர்!


பிறந்த பொழுதில் கனவுகள் கோடி!

பிறந்து வளர்ந்த பொழுதிலே வாழ்க்கை

நிறைகள் குறைகள் ததும்பத் ததும்ப

நிகழ்வுக ளோடு பயணம் தொடர

உறவும் பகையும் உணர்ச்சியின் வேகம்

சிறைகளாய் மாறிட மாற்றங்கள் கோடி

முடிச்சுகள் போட கழற்றிக் கழற்றி

அவிழ்த்திடும் போது சிறகை விரிப்போம்!

தவிப்பில் இறப்பிலே மீளாத் துயில்தான்!

குவித்ததும் எங்கே? குவிந்ததும் எங்கே?

புவியிலே வாழ்க்கை புதிர்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home