Tuesday, November 22, 2022

ஆமைகள்


ஆமைகளுக்கு இடங்கொடுக்காதே!


நன்றி: 

நூல் உலக அமைதிக்குக் குறள்காட்டும் வழி!


பக்கம் 39


           நூலாசிரியர்

திருக்குறள் தூதர் முனைவர்

மு.க. அன்வர்பாட்சா!


ஆமை நுழையவிட்ட வீடோ உருப்படாது!

ஆமைகள் என்னென்ன என்றேதான் பட்டியலைக்

காணவைத்தார் அன்வர்தான் தன்னுடைய புத்தகத்தில்!

நாமும் கடைபிடித்தால் நன்று.


பிறனில் விழையாமை,  வெஃகாமை,

மற்றும்

புறங்கூறா மைபயன்க ளற்றசொல் லாமை

கறைபடிந்த கள்ளாமை, கோபத்தைத் தூண்டும்

வெகுளாமை, இன்னாசெய் யாமை உயிரை 

வதைக்கின்ற கொல்லாமை, கல்லாமை, கீழ்மை

நடைபோடும் சிற்றினம் சேராமை, மந்த

நிலைதரும் பொச்சாவா மைபிறரின் உள்ளம்

உளைச்சலுடன் நோகவைக்கும் தீய குணமாம்

வெருவந்த செய்யாமை, மற்றும் இடுக்கண்

அழியாமை, கூட்டம் நிறைந்த அவையில்

நடுங்காத அஞ்சாமை, நாளும் பெரியார்

வெறுக்க பிழையாமை, கள்ளுண்ணா மையும்

பதினேழு ஆமைகள் உள்ளில் நுழைந்தால்

எதுவும் உருப்படாது பார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home