Sunday, December 11, 2022

நண்பர் பாலு நடராஜன் அன்பளிப்பு





 திருக்குறள் குழந்தைப்பாடல்!


வாழ்த்தினார் நண்பர் பாலு!


கவியரசு காமராசன் எண்ணம் வடித்த

குயிலின்போர்ப்  பாட்டென்னும்

பாநூலை பாலு

அளித்தார் பரிசாக ! பாலாவின் கையால்

களிப்புடன் தந்தார் எனக்கு! மகிழ்ந்தேன்!

குவித்தேன்நான் நன்றிமலர் இங்கு.


எதிர்பார்க்க வில்லை! வியப்பளித்தார்

நூலால்!

வரவேற்பில் கூடி இருந்தநேரம் இந்தப்

பரிசைக் குறள்குடும்ப ராசேந்ரன் வாழ்த்த

வழங்கினார் பாலு உறுப்பினர்கள் பார்க்க!

உளங்கனிந்த நன்றிசொன்னேன் நான்.


குறளதி காரத்தை நானும் இங்கே

குழந்தைப்பா டல்களாக நாளும் பதிவைத்

தவழவிட்டேன்! பாலு படித்தார் மகிழ்ந்தார்!

அகங்குளிர வாழ்த்தினார் பார்.


மதுரை பாபாராஜ்







0 Comments:

Post a Comment

<< Home