Friday, December 09, 2022

புயல் இரண்டு வகைகள்

 வீட்டுப் புயலும் நாட்டுப் புயலும்!


        இரண்டு வகைகள்!


வீட்டில் புயலடித்தால் கூட்டுக் குடும்பத்தில்

ஊற்றெடுக்கும் உட்பகை எப்போதும் சீரழிக்கும்!

நாட்டில் புயலடித்தால் நாலுநாள் சேதங்கள்

காட்டி வலுவிழக்கும் அடுத்த பருவமட்டும்

நாட்டில் அமைதியே வாழ்வு.


வீட்டுப் புயலெனினும் நாட்டுப் புயலெனினும்

ஆற்றல் வலுவிழந்தால் நாசமின்றிப் போய்விடும்!

மாற்றாக நாளும் வலுப்பெற்றால் 

வீட்டையும்

நாட்டையும் சீரழிக்கும் செப்பு.



மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home