Thursday, April 04, 2024

குறளும் என்குறளும்

 குறள் 1049: 

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பா டரிது

மு.வ உரை:

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

என் குறள்:

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் உளைச்சல்

நெருக்கிடின் கண்பா டரிது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home