Saturday, March 28, 2026

குறுந்தொகை 2

 குறுந்தொகை

பாடல் 2- இறையனார்

கூந்தல் நறுமணம் இயற்கையா?  

குறிஞ்சி - தலைவன் கூற்று


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறி யெயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

--------------------------------------------------------------------------------------

எண்ணற்ற பூக்களின் பூந்தாதை தேடியுண்ணும்

தும்பியே! வேண்டுமென்றே கூறாமல்  நீநுகர்ந்த

வண்ண மலரின் நறுமணத்தில் என்தலைவி

அன்பரசிக் கூந்தல் நறுமணம்போல்  உள்ளதோ?

 வண்டே! வந்துநீ என்னிடம் சொல்வாயா?

உன்னைத்தான் கேட்கிறேன் சொல்.!

0 Comments:

Post a Comment

<< Home