Friday, March 27, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 8

 குழந்தைகளுக்கு குறளமுதம் 8

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.


கண்ணே செல்லப் பேத்தியே

கையில் என்ன திருக்குறளா


ஆமாம் தாத்தா உங்களிடம்

பொருளை அறியக் கொண்டுவந்தேன்


இந்தக் குறள்தான் என்தாத்தா

விளக்கம் சொல்லித் தாருங்கள்


ஆகா அருமை சொல்கின்றேன்

உன்னை நானும் மெச்சுகின்றேன்


அறவழி் நடக்கும் சான்றோரின்

அறிவுரை கேட்டு நடந்திட்டால் 


துன்பக் கடலைக் கடக்கலாம்

மற்றவர் கடப்பதோ அரிதாகும்


அறவழிச் சான்றோர் ஒழுக்கத்தைப்

போற்றி் நடந்தால் வாழ்வினிலே


வாழ்க்கைக் கடலை நீந்தலாம்

மற்றவர் நீந்த முடியாது.


0 Comments:

Post a Comment

<< Home