Monday, December 31, 2007

கிண்டி ---- எழும்பூர்

கிண்டியில்
மின்தொடர்
வண்டியில் ஏறினேன்!
அவளது
கெண்டை விழிகள் துள்ளின!

சைதாப்பேட்டை
வந்தது!
சைகை காட்டினாள்!

மாம்பலம் வந்தது!
மான்விழிகள்
பூத்தன!

கோடம்பாக்கம்
வந்தது!
குறுநகை புரிந்தாள்!

நுங்கம்பாக்கம்
வந்தது!
நுரைபோல சிரித்தாள்!

சேத்துப்பட்டு
வந்தது!
செந்தமிழில்
தூதுவிட்டாள்!

எழும்பூர் வந்தது!
எழுந்தாள்!
செள்றுவிட்டாள்!

இதுவரை நிகழ்ந்தது?
ஓ!
கனவா!

0 Comments:

Post a Comment

<< Home