Friday, January 04, 2008

குறளும் காந்தியும்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடலென்ற -- நன்னெறிக்குச்
சான்றாக காந்தியைக் காட்டிலும் பண்பாளர்
ஈங்கொருவர் உண்டோ புகல்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வென்ற -- வள்ளுவத்தின்
நற்சான்றாய் காந்திமகான் இன்றளவும் வாழ்கின்றார்!
அற்புதமே அண்ணலின் வாழ்வு.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று -- புனிதமான
இந்தக் குறளுக்கு காந்தியண்ணல் மட்டுந்தான்
பண்பான சான்றாவார் பார்

0 Comments:

Post a Comment

<< Home