Wednesday, January 30, 2008

சீரடி சாய்பாபா காத்திடுவார்!

நினைக்க நினைக்க நினைவில் அமுதம்
சுனையாய்ச் சுரந்தே மணக்கும்--அன்புடன்
தாள்பணிவோம்!இங்கே துணைநிற்பார்!சீரடி
சாய்பாபா காத்திடுவார் சாற்று.

நடக்க முடியாத விந்தை நடக்கும்!
கடக்க முடியாத காட்டை--கடப்பதற்கும்
காட்சிகள் தென்படும்!காட்டுவார் பாபாதான்!
போற்றிப் புகழ்வோம் புரிந்து.

0 Comments:

Post a Comment

<< Home