Monday, January 28, 2008

நம்பிக்கைதான் வாழ்க்கை!

விழிகளில் ஒளியை ஏற்று--நாளை
விடியலைப் படைத்துக் காட்டு!

வன்முறைப் பாதையைத் தூற்று--அது
என்றும் வேதனை ஊற்று!

அறநெறி தென்றல் காற்று--அது
அமைதிக்குப் பாடும் வாழ்த்து!

வறுமைப் பிணியைப் போக்கு--அதற்கு
வழிகளைத் திரட்டி முடுக்கு!

துரோகம் செய்வதை நீக்கு--நெஞ்சில்
தூய எண்ணத்தைத் தேக்கு!

எதற்கெடுத் தாலும் விரக்தி--பொங்கும்
நிலையை உடனே துரத்து!

நம்பிக் தான் வாழ்க்கை--அதில்
மலரும் வெற்றிப் பூக்கள்!

0 Comments:

Post a Comment

<< Home