Tuesday, July 01, 2008

கருவறை>>>கல்லறை

கருவறையை விட்டு வெளியிலே வந்தே
ஒருவாறாய் நாளும் வளர்ந்து--பருவங்கள்
மாற்றப் பணிக்களம் சென்று பதவிகள்
ஏற்றே பரபரப்போம் இங்கு.

காலைமுதல் மாலைவரை காற்றாய்ப் பறந்தோடி
மாலை மரியாதை சூழ்ந்துவர---வேலையிலே
மும்முரமாய் ஈடுபட்டே ஓர்நாள் பணி ஓய்வில்
வந்திடுவோம் வீட்டிற்குள் நாம்.

முதல்மரி யாதை கிடைத்திருந்த கோலம்
பதர்போல் உதிர்ந்திட பாரில்---நடக்கத்
தொடங்கியதும் கோடியில் ஓர்புள்ளி யாக
நடத்தும் உலகம் திரண்டு.

அனுபவங்கள் தேடிவந்தே தூண்டிலிட்டுப் பார்க்கும்!
முணுமுணுப்பு புன்முறுவல் எல்லம்---அணுவணுவாய்
தேறிவரக் கல்லறைக்குச் செல்கின்ற நாள்வரும்
மேதினியில் ! செல்வோம் பிரிந்து.

0 Comments:

Post a Comment

<< Home