Sunday, September 21, 2008

மழலைகளுக்கு ஒலிமாசுதான் அன்பளிப்பு

பிறந்த குழந்தைகள் தூங்கி விழிக்கத்
தடங்கலற்ற சூழ்நிலைகள் அன்று--உறக்கம்
கலையாமல் தூங்கத் தடைகளைத் தாங்கக்
குழந்தை பழகியது இன்று.

தாலாட்டா?என்னவிலை? என்றுகேட்கும் காலத்தில்
தாலாட்டுப் பாட்டின் இனிமையை -- மாவாட்டும்
எந்திரங்கள் போடும் ஒலிதானோ என்றேதான்
எண்ணும் குழந்தைகள் இங்கு.

தூங்கத் தொடங்கியதும் செல்போன் மணியோசை !
தூங்கும் குழந்தை சிணுங்கிடும்--ஏங்கும் !
இருந்தாலும் இங்கே பழகிவிடும் ! மீறி
அரும்புகள் கண்ணுறங்கும் இங்கு.

தடதட வென்றேதான் வண்டிகளின் ஓசை!
பதறி எழுந்தாலும் நாளும் -- உதறிவிட்டுத்
தூங்கும் பழக்கத்தால் இங்கே குழந்தைகள்
ஏங்காமல் தூங்குதம்மா பார்.

செவியைப் பிளக்கும் ஒலிமாசு நாளும்
புவியில் பெருகிடும் கோலம் -- தவிக்கவைத்தே
பார்த்தாலும் நிர்வாகம் கண்டுகொள் ளாமல்தான்
பாரில் நடக்கிறது! பார்.

1 Comments:

Blogger Deepa said...

அருமை !!!

6:14 AM

 

Post a Comment

<< Home