Sunday, September 21, 2008

பாப்பா ! பாப்பா ! கண்ணுறங்கு!

பாப்பா பாப்பா கண்ணுறங்கு -- பல
தடைகளைத் தாண்டி கண்ணுறங்கு!

செல்போன் மணிகள் அடித்திடலாம் -- நீ
சிணுங்கா மல்தான் கண்ணுறங்கு!

வண்டிகள் சீறிப் பாய்ந்திடலாம் - கொஞ்சமும்
அலட்டா மல்தான் கண்ணுறங்கு!

தொலைக்காட் சிகளின் தொடர்களிலே --சண்டை
சத்தம் கேட்டாலும் கண்ணுறங்கு!

கிரைண்டர் ஓடும் ஓசையையே -- பாடும்
தாலாட் டாக்கி கண்ணுறங்கு!

தெருவில் விற்பனை செய்வோர்கள் --வீட்டு
மணியை அடித்தும் எழுப்பிடுவார்!

அனைத்தையும் மீறி கண்ணுறங்கு -- இந்த
உலகம் இப்படித்தான்! கண்ணுறங்கு!

ஒலிகள் எல்லாம் மாசேதான் -- அனைத்தும்
உனக்குப் பரிசேதான்! கண்ணுறங்கு.

0 Comments:

Post a Comment

<< Home