Thursday, December 18, 2008

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

உடலின் அழுக்கை உரசிஉரசி நீக்கக்
குடங்குடமாய் நீரால் குளிப்பாய் -- குடங்குடமாய்
ஊற்றிக் குளித்தாலும் உள்ளம் அழுக்குகளைத்
தேக்கினால் என்னபயன் செப்பு?

இறைவன் மிகவும் பெரியவன் என்றே
நிறைவுடன் நம்பியே நித்தம் -- முறையாய்
முழுமன பக்தியில் மூழ்கித் திளைத்தால்
அழுக்கை அகற்றும் அகம்.

மதுரை பாபாராஜ்
2005

0 Comments:

Post a Comment

<< Home