Thursday, December 18, 2008

புதியதும் உண்டோ புகல் ?

தாய்ப்பால் இயற்கைத் தருகின்ற ஞானப்பால் !
சேய்களைக் காக்கின்ற தேனமுதம் -- தாய்மை
துதிக்கின்ற இத்தகையத் தூய்மையான சேய்ப்பால்
புதியதும் உண்டோ புகல்?

இப்படித்தான் தூக்கம் !

பாயும் தலையணையும் பார்த்ததில்லை செந்தமிழே!
பாயாகும் மண்தரைதான்! பற்றுடனே -- சாய்வதற்குத்
திண்டாக என்கரங்கள் சேரத் தலைக்கடியில்
அண்டலாக்கித் தூங்குகின்றேன் ! நான்.

உளைச்சலைத் தூவாதே!

உதவிகள் செய்யும் ஒருநிலை இல்லை!
அதுகூட நல்லதுதான்! ஆனால் -- உறுத்தும்
உளைச்சலைத் தூவும் ஒருநிலை ஏற்கும்
நிலையோ கொடிது! நிறுத்து.

மதுரை பாபாராஜ்
2005

0 Comments:

Post a Comment

<< Home