Wednesday, February 04, 2009

கம்பராமாயணக் காட்சி -- இராமன் காடேகும் செய்தி கேட்ட மக்கள் கருத்து

"ஆளான் பரதன் அரசு "என்பார்; "ஐயன் இனி
மீளான், நமக்கு விதி கொடிதே காண்!" என்பார்;
"கோளாகி வந்தவா கொற்ற முடிதான்" என்பார்;
"மாளாத நம்மின் மனம் வலியார் யார்?" என்பார் (1801)
-------------------------------------------------------------------------------------------------------

பரதனுக்கு ஆட்சியைத் தாய்தந்த போதும்
பரதன் தனக்குரிமை இல்லா அரசை
அரசாட்சி செய்ய இசையமாட்டான் என்றே
ஒருசிலர் கூறுவார் பார்.

தலைவன் இராமனோ கானகம் சென்ற
நிலையேற்ற பின்பு நகருக்குள் மீண்டும்
வருவதற்கே ஒப்பமாட்டான்! நம்விதி இங்கே
இருக்கிறதே என்பார் சிலர்.

அணிசெய்யக் காத்திருக்கும் மங்களம் பொங்கும்
மணிமகுடம் இன்றிங்கே தீமை பொழியும்
தனிக்கோளாம் தூமகேது கோளாகி ராமன்
வனம்செல்லச் செய்ததென்பார் ! சூழ்ந்து..

இத்தகைய தீங்கினைக் கேட்டபின்பும் கண்டபின்பும்
எப்படி நம்முயிர் நீங்காமல் வாழ்கின்றோம்?
இப்படி வன்நெஞ்சர் யார்தான் இருப்பாரோ?
உற்றபழி வந்ததென்பார் நொந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home