Tuesday, February 03, 2009

நினைப்பதில் தவறில்லை

முதுமையில் தன்கணவன் தொந்தரவாய் மாறி
வெறுப்புக்கே வித்திடும் போது -- நறுந்தேன்
மனைவியும் அன்பன் தனக்குமுன் செல்ல
நினைப்பாள் ! தவறில்லை! சாற்று.

இருந்தால் அனுசரிக்கும் பக்குவம் வேண்டும்!
பெருந்தன்மைப் பண்பில் திளைத்து -- உருவாகி
நடக்கின்ற சூழ்நிலைக்குத் தன்னையே மாற்றி
நடந்துகொண்டால் என்றும் நலம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home