Saturday, January 31, 2009

கம்பராமாயணக் காட்சி

கணவனைத் துச்சமென எண்ணிய கைகேயி

காட்டில் திரியவேண்டும் ராமன்என்றும் தன்மகனோ
நாட்டில் முடிசூட்ட வேண்டுமென்றும் -- கேட்டு
வரம்பெற்றாள் கைகேயி! சொன்னசொல் மாறா
தயரதனும் தந்தான் தளர்ந்து.

எப்படி மன்றாடிக் கேட்டான் தசரதன்!
இப்படி அப்படி என்றே அசையாமல்
அப்படியே நின்றாள் கைகேயி!வென்றுவிட்டாள்!
அப்பப்பா ! காரிகைதான் கல்.

காரிகையின் வஞ்சத் தூரிகை தீட்டிய
காரிருள் ஓவியத்தின் வக்கிரம் தாங்காமல்
தேர்மன்னன் நொந்து விழுந்தான்! துடித்தான்!
பாரில் துயிலிழந்தான்! பார்.

தசரதனின் சோக நிலைகண்டு கோழி
சிறகினை மார்பில் அடித்தே அலற
கடமை தவறாத ஆதவன் அன்றும்
கடமையாய் வந்தான் உதித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home