Tuesday, January 20, 2009

குழப்பத்தில் மனது !

குழப்பங்கள் கொக்கரித்துச் சிரிக்குதம்மா!
கூண்டுக்குள் கிளியாகத் துடிக்குதம்மா!
அலைக்கழிக்கும் எண்ணங்கள் ஆடுதம்மா!
அலைபோல எழுந்தேதான் சீறுதம்மா!

தூண்டிலிலே மீனாக்கிப் பார்க்குதம்மா!
துன்பத்தின் தீநாக்குப் படருதம்மா!
ஊனுறக்கம் கலையவைத்து உலவுதம்மா!
உளைச்சலையே விளைச்சலாக்கிப் பெருக்குதம்மா!

என்னென்ன சொன்னாலும் அடங்கவில்லை!
ஏனிந்த நிலைஎன்றே விளங்கவில்லை!
என்னபாவம் செய்தேன்நான்? புரியவில்லை!
ஏனிந்த மனக்குழப்பம் ?தெரியவில்லை!

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger ers said...

நெல்லைத்தமிழின் புதிய திரட்டி
nellaitamil

10:24 PM

 

Post a Comment

<< Home