Saturday, January 03, 2009

கணவன் மனைவிக்கு எழுதிய கவிதை

நீ ஒரு நெருப்பு வளையம் -- உன்
நிழலுக்கும் இல்லை சலனம் !

அன்பைப் பொழிவதில் மழைதான் --அதில்
அனைவரும் நனைந்தே மகிழ்வார்!

சிறுவர் பெரியவர் என்றே -- நெஞ்சில்
சிறிதும் பேதம் இல்லை!

பக்குவம் கனிந்த உள்ளம் -- நல்ல
பண்புகள் உலவும் இல்லம்!

கடமை உனது மூச்சு -- அந்தத்
தடமே உனது பேச்சு!

உண்மையாய் உன்னிடம் இருந்தால் --அந்த
உண்மைக்கே நீதான் அடிமை!

குடும்பத் தேரை இழுப்பதில் -- உந்தன்
குணங்கள் தானே தலைமை!

எனக்கெனப் பிறந்த இனிமை -- நான்
உனக்கென வாழும் கவிதை.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger cheena (சீனா) said...

அருமை அருமை

அழகுக் கவிதை

எளிய சொற்கள்

மனைவியைப் பர்றிய கணவனின் உண்மை உணர்வுகளை உணர்த்தும் கவிதை

7:55 PM

 

Post a Comment

<< Home