Wednesday, January 07, 2009

கவிதை

வேலென விழிகள் சொல்ல
வில்லெனப் புருவம் சொல்ல
பாலெனப் பருவம் சொல்ல
படையென இடையோ சொல்ல

நூலென உருவம் சொல்ல
நூதனம் இதழ்கள் சொல்ல
பூவெனப் பெண்மை சொல்ல
பொலிவுடன் நின்றாள் பாவை!

அலையென நடையோ சொல்ல
அருவியை வளையல் சொல்ல
கலைஎனச் சிரிப்போ சொல்ல
காரெனக் கூந்தல் சொல்ல

மலைத்திடச் செய்யும் வண்ணம்
மனதினில் புகுந்து கொண்டு
நிலைத்தவள் பெயரைக் கேட்டால்
நித்திலக் கவிதை என்பேன்!

மதுரை பாபாராஜ்
1985

0 Comments:

Post a Comment

<< Home