Sunday, January 04, 2009

இப்படி வேண்டுமா?இறுதி ஊர்வலம்?

இறந்தவர் உடலை இங்கே
இறுதிஊர் வலத்தில் வைத்தே
உறவுகள் சுற்றம் சூழ
ஊரெலாம் கூடி நிற்க

மறைந்தவர் மாண்பை எல்லாம்
மனத்திரை போட்டுக் காட்ட
இறைவனை வேண்டிக் கொண்டே
எரிதணல் மூட்ட வேண்டும்!

அவரவர்க் கடமை தன்னை
அமைதியாய்ச் செய்ய வேண்டும்!
பரபரப் பான போக்கில்
பார்ப்பவர் நடுங்கும் வண்ணம்

விரசமாய் ஆடிக் கொண்டும்
வெடிகளை வெடித்துக் கொண்டும்
தெருவினை அடைத்துக் கொண்டும்
செல்வது தேவை தானா?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home