Monday, January 05, 2009

உலகியல் உண்மை

கணவனை உலகில் விட்டுக்
காரிகை இறந்து விட்டால்
கணவனோ சுமையாய் ஆவான் !
காப்பவர் முகஞ்சு ழிப்பார்!

என்னதான் பார்த்த போதும்
இல்லறத் துணைவி பார்க்கும்
பொன்மனத் தியாகப் பார்வை
புவியினில் எவர்க்கும் இல்லை!

மனைவியின் மடியில் சாய்ந்து
மன்னவன் போக வேண்டும்!
கணவனும் மானத் தோடு
காசினி விட்டுப் போவான்!

கணவனைப் பிரிந்து வாழும்
காரிகை தினமும் சுற்றம்
மணந்திட வாழ்வாள்!ஏக்கம்
மனதினில் பெருமூச் சாகும்!

மங்கையின் இறுதி மூச்சு
மண்ணகம் ஏந்தும் மட்டும்
மங்கையோ ஒளிவி ளக்காய்
மனையிருள் நீக்கி வாழ்வாள்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home