Monday, January 26, 2009

சமுதாய வீதியில் முதியவர்

எனக்கென யாரு மில்லை!
ஏன்எனப் புரிய வில்லை!
மனத்தினில் ஏக்கக் கூட்டம்
மலையென வளரக் கண்டேன்!

இருப்பதில் என்ன லாபம்?
இறப்பதில் என்ன நஷ்டம்?
இரண்டுமே ஒன்று தானே?
இறப்பினில் அமைதி கிட்டும்!

கடலினில் மூழ்கும் போது
கைகளில் தக்கை ஒன்று
கிடைத்திட ஏங்கும் உள்ளம்!
கிடைத்ததும் கரையைத் தேடும்!

அன்பெனும் அரவணைப்பே
அப்படிப் பட்ட தக்கை!
எங்குநான் தேடிச் செல்ல?
ஏக்கமே எனது வாழ்க்கை!

இருப்பதால் இன்னல் தொல்லை
என்றுநான் மாறும் போது
இருப்பதை விட்டு விட்டே
இறப்பது மேல்தான் என்பேன்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home