Monday, January 26, 2009

இலங்கைத் தமிழைர்களைக் காப்பது நம் கடமை

இன்னுமா வேண்டுகோள்கள் ?
இன்னுமா தீர்மானங்கள்?
இன்னுமா பொறுமைப் பேச்சு?
இன்னுமா உறங்கும் கோலம்?

சிங்கள ராணுவத்தின்
தினவெடுத் தாடும் போக்கில்
என்னருந் தமிழர் கூட்டம்
இன்னலில் கருகு கின்றார்!

தன்னுயிர் உடமை காக்க
தமிழரோ ஓடுகின்றார்!
சிங்கள ராணுவத்தார்
சீறியே கொல்லுகின்றார்!

வீடினை இழந்து விட்டு
வீதியில் வாழும் கோலம் !
காட்சியைப் பார்க்கும் போது
கண்களில் ரத்த வெள்ளம்!

அரசியல் வேறு பாட்டை
அனைவரும் ஒதுக்கி வைத்தால்
அழிந்திடும் தமிழினத்தை
அனைவரும் காக்கக் கூடும்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home