Thursday, February 19, 2009

கம்ப ராமாயணக் காட்சி

கம்ப ராமாயணக் காட்சி
--------------------------------------
இராமனுக்கு இலக்குவன் மறுமொழி
-------------------------------------------------------------
"நீர் உள எனின் உள மீனும் நிலமும்;
பார்உள எனின் உள யாவும்; பார்ப்புறின்
நார்உள தனு உளாய்?நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்?அருளுவாய்!" என்றான்.( 1851)
===============================================================================
நீர்நிலைகள் உள்ளதால் மீன்களும் பூக்களும்
பாரில் உயிர்வாழும்!பூமி இருந்தால்தான்
சீராய் உயிரினங்கள் வாழுமண்ணா! எங்களுடன்
யாரிருந்தால் வாழ்வோம்?பகர்.

தாய்க்கு நிகரான சீதையும், நானுமிங்கே
யாரிருந்தால் நிம்மதியாய் வாழ்ந்திருப்போம்?-- நேர்மையின்
ஊற்றே! நீங்களே கூறுங்கள்! என்றேதான்
கேட்டான் இலக்குவன் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home