Sunday, February 15, 2009

குழந்தை

தாயமுதம் பெற்றெடுத்த தேன்மழலைப் பிஞ்சுமொழி
வாயமுதம் பொங்கிவரும் நற்சுவையின் முன்னாலே
பாற்கடலில் பொங்கிவந்த நல்லமுதத் தேன்சுவையோ
தோற்றுவிடும் என்றேதான் சாற்று.

கனிமழலைத் தேனமுதப் பிஞ்சு வளர்ந்து
அணியணியாய் சாதனைக்கு வித்தூன்றும் போது
புனிதவதி தாயிங்கே பூரித்தே நிற்பாள்!
இனிமை இதுவென்பாள் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home