Thursday, February 19, 2009

கம்ப ராமாயணக் காட்சி

--------------------------------------
சுமித்திரையிடம் இராம இலக்குவர் விடைபெற்றுச் செல்லுதல்
---------------------------------------------------------------------------------------------------
இருவரும் தொழுதனர்;இரண்டுகன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின், த்தையும் விம்மினாள்;
பொறு அரும் குமரரும் போயினர் புறம்
திரு அரைத்துகில் ஒரீஇச் சீரை சாத்தியே. (1847)
=================================================================
தாய்ப்பசுவின் கண்முன் ஒருசேர ஒரேநேரம்
சேய்க்கன்று இரண்டும் பிரிந்துசெல்லும் கோலத்தை
பார்ப்பதுபோல் தேம்பி நடுங்கி அழுதிருந்தாள்!
தாய்மனம் நொந்தது பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home