Tuesday, April 21, 2009

போரை நிறுத்து!

இலங்கை அரசே! இலங்கை அரசே!
போரை நிறுத்திவிடு!

இந்திய அரசே! இந்திய அரசே!
உடனே ஆணை இடு!

மௌனம் போதும் மௌனம் போதும்
இன்றே கலைத்துவிடு!

அப்பாவி மக்கள் சாவதைத் தடுக்கும்
விவேக நிலையை எடு!

சிந்திய ரத்தம் சிந்திய உயிர்கள்
போதும் போதுமடா!

ஒருவர்க் கொருவர் குற்றம் சாட்டிய
நிலையும் போதுமடா!

அனைவரும் திரண்டே ஒன்றாய் நின்றே
அழிவைத் தடுப்போமடா!

காரணம் சொல்லி மக்களைக் காக்கும்
கடமை தவறவேண்டாம்!

கடந்த காலம் இந்தியா காத்ததை
என்றும் மறக்கவேண்டாம்!

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger Kandumany Veluppillai Rudra said...

மனம் நிறைந்த தமிழ்க் கவிவரிகள்
மதி தனில் நிலைக்கும் தமிழ் மொழிகள்
உயிரெனப் பிரியா உண்மை அணிகள்
உங்கள் படைபுகளெல்லாம் பொன் மணிகள்

10:20 AM

 

Post a Comment

<< Home