Sunday, April 19, 2009

இலங்கையில் எங்களது பேரழிவைத் தடுப்பது யார்?

குடும்பம் குடும்பமாய்ப் பாதுகாப்பை நாடிப்
பதுங்கு குழிகளில் நாங்கள் ! -- சொடுக்கும்
மணித்துளிகள் எல்லாம் மரணத் துளிகள்!
மனித உயிர்க் கென்ன மதிப்பு?

விதவிதமாய்க் குண்டுகளை வீசி எறிந்தே
பதுங்கு குழியை மரணக் குழியாய்
ஒடுக்கும் நிலையெடுத்துத் தாக்குகின்றார்! கண்முன்
குடும்பம் சிதைகிறது! கூறு.

அழியும் விலங்கினத்தைக் காப்பதற்கும் திட்டம்
தெளிவாக நாடுகளில் உண்டு -- அழியும்
தமிழினத்தைக் காப்பதற்கு நாடுகளோ ஏனோ
இமைகளாய் மறவில்லை இங்கு?

கண்ணெதிரே எங்கள் குடும்பத்தார் சாகின்றார்!
அங்கேயே விட்டுவிட்டு ஓடுகின்றோம் -- துன்பக்
கழுகுகளின் கால்களில் சிக்கித் தவித்தே
அழுகின்றோம் நித்தமுந் தான்!

அடுத்தவீட்டுப் பேரழிவை வேடிக்கை பார்க்கும்
கொடுமையானப் போக்குள்ள பாரில் -- அடுத்தநாட்டுப்
பேரழிவை முன்வந்து நின்று தடுப்பாரோ?
சீரழியும் சித்திரமே! செப்பு.

அரசியல் வாதி வரலாற்றைப் பேசி
அரசிய லாக்குகின்றார் எம்மை!-- களவெற்றி
காண பகடைக்காய் ஆக்கி உருட்டுகின்றார்!
ஊனமனம் பெற்றதேன்? சொல்.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger Shan Nalliah / GANDHIYIST said...

Great...Greetings ...Thanks!

11:23 PM

 

Post a Comment

<< Home