Monday, March 23, 2009

கம்பராமாயணக் காட்சி

---------------------------------------
தசரதன் உடலை எண்ணெய்க் கொப்பரையில் இடுதல்
----------------------------------------------------------------------------------------------
"செய்யக்கடவ செயக்கு உரிய
சிறுவர் ஈண்டையர் அல்லர்;
எய்தக் கடவபொருள் எய்தாது
இகவா என்ன இயல்பு?" என்னா,
"மையல் கொடியாள் மகன் ஈண்டு
வந்தால் முடித்தும் மற்று" என்னாத்
தையல் கடல்நின்று எடுத்து அவனைத்
தைலக் கடலின்தலை உய்த்தான்" (2010)
========================================================

தசரத மன்னன் உயிர்பிரிந்த போது
மகன்கள் ஒருவரும் பக்கத்தில் இல்லை!
மகனாம் பரதன் வரும்வரையில் வேந்தன்
உடல்தன்னைத் தைலக் கடாரத்தில் இட்டுக்
கெடாமல் இருக்குமாறு பாதுகாக்கச் சொன்னான்
அறவோன் வசிட்டன்தான் அங்கு.
-------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home