Sunday, March 15, 2009

தசரதன் தளர்தலும் முனிவன் செல்லுதலும்

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------

"இல்லை" என்று உரைக்கலாற்றான்;
ஏங்கினன் முனிவன் நின்றான்;
நல்லவன் முகமே நம்பி
வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும், அரசன் சோர்ந்தான்;
துயர்உறும் முனிவன், "நான்இவ்
அல்லல் காண்கிலேன்" என்னா,
அங்கு நின்று அகலப்போனான்.(1993)
================================================
ராமன் வரவில்லை என்பதைச் சொல்லாமல்
ஞானமுகம் வாடக் குறிப்பல் உணர்த்தினான்!
மாமன்னன் மீண்டும் மயங்கிச் சரிந்துவிட்டான்!
ஞானமுனி நீங்கினான் விட்டு.
--------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home