Sunday, March 15, 2009

இலக்குவன் சுமந்திரனிடம் கூறியவை

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------

"உரைசெய்து எம்கோமகற்கு உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத் தவிர , மற்றொரு
விரைசெறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்றுஅறையற் பாலதோ?"(1977)
============================================================
உனக்குத்தான் இவ்வரசு என்றுசொல்லி விட்டு
மனைவிக்கு வாக்குறுதி தந்து இராமன்
வனமேகச் செய்த தசரதனை மன்னன்
எனக்கூறல் நன்றோ? உரை.
------------------------------------------------------------------------------------------------------
"கானகம் பற்றி நற்புதல்வன் காய்உணப்
போனகம் பற்றிய பொய்இல் மன்னற்கு, இங்கு
ஊன்அகம் பற்றிய துயரொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு" என்றான். (1978)
========================================================
காட்டில் கிடைக்கும் உணவுகளை ராமனோ
கூட்டிவைத்தே உண்ண , அறுசுவை உண்டியை
நாட்டில் ருசித்து மகிழும் அரசனிடம்
காட்டின் துயரத்தைச் சொல்.

என்றே மனக்கொதிப்பை லெட்சுமணன் சீறியே
சிந்தினான் கோப அனல்மழையை அங்கேதான்!
தன்னுடைய ஏமாற்ற எண்ணத்தை இவ்வாறு
தன்கருத்தாய்க் கூறினான் சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home