Sunday, March 15, 2009

தேரோட்டி சுமந்திரனின் ஏக்கம் ததும்பும் கேள்விகள்

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------


"தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என் கோ?
கோவினை உடன் கொடு குறுகினேன் என் கோ?
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன்"?(1955)
======================================================
என்னை எதிர்வந்து கேட்கின்ற மக்களிடம்
உங்களைக் கானகத்தில் விட்டுவிட்டேன் என்பேனா?
என்னுடன் நீங்களும் வந்தீர்கள்! என்பேனா?
என்னசொல்லித் தேற்றுவேன் நான்?
------------------------------------------------------------------------------------------------------------------------------
"தார் உடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
வார் உடை முலையொடு மதுகை மைந்தரைப்
பாரிடைச் செலுத்தினேன்: பழைய நண்பினேன்,
தேரிடை வந்தனென் , தீதிலேன் என் கோ?"(1956)
=========================================================================
சீதையை ராம இலக்குவரைக் காட்டினிலே
வேதனைக்கு உள்ளாக்கி கால் நோக செல்லவிட்டு
சோதனையே இன்றி சுகமாக நான்வந்தேன்
தோதாக என்பேனா?நான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
வன்புலக் கல்மன மதி இல் வஞ்சனேன்,
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்
உன் புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கேனோ?
தென்புலக் கோமகன் தூதில் செல்கேனோ?(1957)
========================================================================
மனமுடைந்து வாடும் தசரதனைப் பார்த்து
குணக்குன்று நீசொன்ன சொற்களைச் சொல்லி
வணங்கவா? த்ற்கின் இயமனுக்குத் தூதாய்
இணக்கமுடன் செல்லவா? நான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
"நால்திசை மாந்தரும் நகர் மாக்களும்
"தேற்றினர் கொணர்வர் என்சிறுவன் தன்னை"என்று
ஆற்றின அரசனை, ஐய! வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன் கொலோ?(1958)
==========================================================================
மக்களெல்லாம் ராமனைத் தேற்றிக் கொணர்ந்திடுவார்
இக்கணமே என்றே உயிர்வாழும் மாமன்னன்
அக்கறையாய்ப் பார்க்க கொடுஞ்சொல்லைச் சொல்வதால்
குட்றம் சுமப்பதா?நான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
"அங்கிமேல் வேள்வி செய்து, அரிதின்பெற்ற, நின்
சிங்கஏறு அகன்றது" என்று உணர்த்தச் செல்கெனோ?
எங்கள் கோமகற்கு இனி என்னில், கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்.(1959)
============================================================================
உன்னன்னைக் கைகேயி இன்னலைத்தான் தூவினாள்!
என்சொல்லோ மன்னனின் இன்னுயிரைப் போக்கிவிடும்!
மண்ணுலகில் கைகேயி நல்லவளாய் மாறிவிட
என்னை பலியிடவோ நான்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home