Sunday, March 08, 2009

சீதையின் மறுமொழி

கம்பராமாயணக் காட்சி
------------------------------------------------
சீதையின் மறுமொழி
------------------------------------------------
பரிவு இகந்த மனத்தொரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு? என்றாள். (1922)
-----------------------------------------------
பெண்ணென்றும் எண்ணி இரங்காமல், அன்பரசி
உன்மனைவி என்கின்ற பற்றுதலும் இல்லாது
என்னைப் பிரிவதற்கு முற்படுவதை என்னென்பேன்?
இன்னலை ஏதென்பேன்? யான்.

கானகம் என்ன கடுமையா? அய்யகோ!
தேனகத்தில் நானிருக்க கானகத்தில் நீயிருக்க
ஈனமான அப்பிரிவைக் காட்டிலும் சுட்டெரிக்கும்
வேனலாமோ அக்காடு ? சொல்.
----------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home