Sunday, March 08, 2009

சீதை வருந்துதல்

கம்பராமாயணக்காட்சி
--------------------------------------------
-----------------------------------------
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேயமண் இழந்தான் என்றும் விம்மிலர்;
"நீ வருந்தலை;நீங்குவென் யான்";என்ற
தீய வெம்சொல் செவிசுடத் தேம்புவாள்.(1918)
====================================================
தங்கணவன் கானகம் செல்கின்றான் என்பதற்கோ
மன்னன் அளித்த அரசுரிமை-- சென்றதற்கோ
சீதை அழவில்லை! இராமன் உதிர்த்திட்ட
கூடறுக்கும் சொற்கேட்டாள் வெந்து.

கானகம் சென்று வருகின்றேன்! நீயிங்கே
தேனகத்தில் சற்றும் வருந்தாமல் வாழ்ந்திரு!
மானே1 எனச்சொன்ன வெங்கொடுமைச் சொற்களால்
மானவள் தேம்பிநின்றாள்! பார்.
----------------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home