Thursday, February 19, 2009

கம்பராமாயணக் காட்சி

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------
வசிட்டன் மனநிலை
(இராமன் இலக்குவன் மரவுரிக் கோலத்தில் )
----------------------------------------------------------------------
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்;
பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;
என்இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,
தன்னையும் உணர்ந்திலன்,உணரும் தன்மையான்.(1857)
===============================================================================
மரவுரி ஏந்தும் இருவரையும் பார்த்தான்!
வலம்வரும் ஊனக்கண் கொண்டே -- அவர்கள்
முகத்தையும் நெஞ்சத்தை ஞானக்கண் ணாலும்
அகம்நொறுங்கப் பார்த்தான் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home