Saturday, February 21, 2009

கம்ப ராமாயணக் காட்சி

--------------------------------------
இராமர் இலக்குவர் மரவுரிக் கோலம் கண்டு
பொதுமக்களின் துயரம்.
============================================
"மண்கொடு வரும் என வழி இருந்தது யாம்,
எண்கொடு சுடர்வனத்து எய்தல் காணவோ ?
பெண்கொடு வினை செயப்பெற்ற நாட்டினில்
கண்கொடு பிறத்தலும் கடை" என்றார் சிலர்.(1884)
==================================================
அரசுரிமை ஏற்று மணிமகுடம் தாங்கி
அரசாள ராமன் வருவான்பார் என்றே
அரண்மனையில் காத்திருந்தோம்! எங்களது எண்ணம்
கரைந்தே அழிந்தது காண்.

கானகம் நோக்கியவன் செல்கின்ற காட்சியைக்
காணவேண்டும் என்பதற்கா காத்திருந்தோம் நாங்களிங்கே!
ஊனமணப் பெண்ணின் இழிசெயலைப் பார்த்திருக்கும்
ஊன்கண்ணைத் தாங்கல் இழிவு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home