Sunday, March 08, 2009

இப்படி ஆள்தல் இழிவு

---------------------------------------------
சாக்கடை துர்நாற்றம், வண்டிகலின் பேரிரைச்சல்
தாக்கும் கொசுப்படைகள், ஈக்களும் பூச்சிகளும்
நாட்டமுடன் மொய்த்திருக்கும் தின்பண்டத் துண்டுகள்
ஆட்சிசெய்யும் ஏழையின் வீடு.

இத்தகைய சூழ்நிலையில் கோடிகோடி மக்களிங்கே
நித்தம் கடைத்தேற்றம் காணாமல் வாழ்கின்றார்!
எப்படியோ வாழட்டும் என்றே அரசுகள்
இப்படி ஆள்தல் இழிவு.
----------------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home