Friday, March 20, 2009

குழந்தை மனம்

பாசமழை பெய்து விளையாடக் கூடுகின்ற
நேசமிகு பச்சைக் குழந்தைகள் -- வேகமாய்ச்
சீறும் எரிமலையாய் மாறியே அப்படியே
வேறுபட்டும் நிற்பார் சொல்.

வேறுபட்டார் என்றே விலக்கிவிட்டுப் போய்விட்டால்
மாறுபாட்டை எல்லாம் மறந்துவிட்டு -- மாறிக்
குழந்தைகள் மீண்டும் ஆடிநிற்பார் கூடி!
குழந்தைகள் என்றும் புதிர்.

1 Comments:

Blogger ஆ.சுதா said...

நன்று

9:14 PM

 

Post a Comment

<< Home