Monday, September 07, 2009

இதுதான் தியாகம்

-----------------------------
மனைவி இருந்து கணவன் மறைந்தால்
அனைத்தும் முறையாய் நடக்கும்--மனையில்
மனைவி மறைந்து கணவன் இருந்தால்
அனைத்துமே தாறுமாறு தான்.

கணவன் படுத்த படுக்கையாய் ஆனால்
குணவதி துஞ்சாமல் சேவை புரிவாள்!
குணவதி அப்படி ஆனால் கணவன்
பணந்தருவான்! சேவை ?அரிது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home