Thursday, September 10, 2009

யாதும் ஊரே!யாவரும் கேளிர்!-- எங்கே?

யாதும் ஊரே!யாவரும் கேளிர்!-- எங்கே?
============================================
எந்தநாடு என்றாலும் என்னுடைய நாடென்றும்
எந்தநாட்டு மக்களும் எம்மக்கள் என்றுந்தான்
சங்ககாலப் பாவலன் பாடிவைத்தான்!கண்ணருகே
வன்கொடுமை!பார்த்திருப்போம் நாம்.

தானாடா விட்டாலும் தன்சதை ஆடுமென்றார்!
தானுமிங்கே ஆடவில்லை ! தன்சதையும் ஆடவில்லை!
தானுண்டு தன்குடும்பம் உண்டென்றே வாழ்கின்றோம்!
ஊனமன ஊர்வலந்தான் பார்.

எரிதணலில் காகிதமாய் ஒவ்வொரு நாளும்
தவித்தே மரணத்தின் வாசலில் வாழ்க்கை
சரிந்துவிழ, பூக்கள் கருகுதடா! பார்த்தும்
புவியரசு மௌனத்தில் ! ஏன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home