Friday, March 26, 2010

இழைகளும் பிழைகளும்

உயிர் ============ 

கணவன் மனைவி உயிரோட்டம் தந்து மணக்கவைக்கும் இல்லறத்தில் இன்பங்கள் நாளும் வணங்கி மகிழும்! நிறைவில் திளைக்கும்! 
சுணக்கம் நெருங்காது சொல். 

 மெய் ========== 

கண்டதே காட்சியென்றும் கொண்டதே கோலமென்றும் 
தன்மெய்யைப் பொன்மணித் தேராக்கி நாள்தோறும் 
 மண்ணக வாழ்வில் பணமே அனைத்துமென 
கண்மூடி வாழ்தல் களை.

 உயிர்மெய் ================ 

கருத்துக்கள் மோதினாலும் பேசியே தீர்த்தே ஒருமித்த உயிர்மெய்போல் என்றும் இணைந்தே 
பெருமை மிளிர, கணவன் மனைவி கருத்துடன் வாழ்தல் உயர்வு. 

 ஆய்தம் ============ 

எடுத்ததற் கெல்லாம் வெடித்துச் சிதறி கடுகடு வென்றே கணவன் மனைவி சிடுசிடுத்தே ஆயுத மானால் அமைதி கடுகளவும் இல்லை உணர்.

0 Comments:

Post a Comment

<< Home