Friday, March 19, 2010

வேடதாரி!

வேடதாரி!
=================
ஆசையைத் தூண்டும் அனைத்தும் அருகிருக்க
கூசாமல் தன்னைத் துறவி எனக்கூறும்
வேடதாரி பின்னாலே மக்கள் திரண்டேதான்
கூடுகின்றார் ஓடுகின்றார்! ஏன்?

வேடம் கலைந்ததும் ஏமாறி நிற்கின்றார்!
நாடே நகைக்கிறது! ஆனாலும் இந்தநிலை
ஏடு மணக்கத் தொடர்கதையாய் வீடுதோறும்
பாடுபொருள் ஆகிறதே!ஏன்?

பட்டாலும் ஏனோ திருந்த மறுக்கின்றார்!
தொட்டால் சுடுமென்றே சொன்னாலும் நாள்தோறும்
தொட்டேதான் பார்க்கின்றார்! தங்கள் பகுத்தறிவை
விட்டொதுக்கிச் செல்கின்றார்! ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home