Sunday, March 28, 2010

காலம் காப்பாற்றும்?

=====================
ஆயிரம் துன்பங்கள் அன்றாடம் போராட
நூலிழையில் மூச்சுவிடும் வாழ்க்கையிது--வேலிக்குள்
ஓடவிட்டு வேடிக்கை பார்க்கின்ற சூழ்நிலைகள்!
கூடவிழ ஆடுகின்றோம் நாம்.

ஆடுவதைப் பார்க்கின்றார்! ஆறுதலும் கூறுகின்றார்!
கூடுகளோ மாறிமாறி கோலங்கள் ஏற்றிருக்கும்!
பாடுவதில் ராகபேதம் நாள்தோறும் ஊடாடும்!
கூடுபவர் நிற்பதில்லை யே.

நிற்பதற்கு நேரமில்லை! மண்ணில் பரபரப்பு
புற்றரவம் போலத்தான் சீறுகின்ற வேலைகள்!
கற்றவரா? கல்லாத மாந்தரா? பேதமில்லை!
சுற்றுகின்றார் நேரமின்றி தான்.

தேற்றிடுவார்!தேன்மொழியில் பேசிடுவார் தோள்பற்றி!
போக்கற்று வக்கற்று ஏக்கமுடன் பார்த்தாலோ
சாக்குகளைச் சொல்லி நகர்ந்திடுவார்!காலந்தான்
காப்பாற்றும் என்றிடுவார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home