Wednesday, August 25, 2010

நாட்டின் அமைதிக்கு

=========================
வஞ்சக எண்ணங்கள் வன்முறையைத் தூண்டிவிடும்!
வன்முறையோ அப்பாவி மக்களையே பந்தாடும்!
தன்னலத்தை முன்வைத்துக் கண்டபடி வாழ்கின்றார்!
என்றிது மாறுமோ?கூறு.

மாற்றம் வரவில்லை என்றாலோ பேரழிவே
ஊற்றெடுக்கும்! உட்பகையே கூத்தாடும்!கும்மாளம்
போட்டுத்தான் நல்லமைதி கேள்விக் குறியாக
வாட்டி எடுத்துவிடும் பார்.

நல்லமைதி தோன்ற மனிதநேயச் சிந்தனைகள்
உள்ளத்தில் நாளும் மலர்ந்து வாழ்விலே
எல்லோரும் எல்லாம் பெறுகின்ற வாய்ப்பினைத்
தள்ளித்தான் போடாமல் தா.

வன்முறையைக் கைவிட்டு நன்முறையைப் பின்பற்று!
வஞ்சகத்தைத் தூக்கிஎறி !உட்பகையைத் தேக்காதே!
உண்மையை வாழ்வாக்கு! பொய்மையைக் கிள்ளியெறி!
என்றும் அமைதிதான் நாடு.

0 Comments:

Post a Comment

<< Home